தொ.ப என்ன சொல்கிறார்?

பேராசிரியர் தொ.பரமசிவன் ஐயாவின் சமயங்களின் அரசியல் என்ற நூலை வாசித்து முடித்தேன். இந்நூலின் கரு என்பது இந்துமதம் என இன்று அறியப்படும் வைதீக பிராமணிய மதம் எப்படி வேத வேள்விகள் மூலமும் சாதிய அடக்குமுறை மூலமும் அரசதிகாரத்தை கைக்கொண்டு சைவ வைணவ, சமண, பௌத்த சமயங்களை உட்செறித்து தன்னை நிலைநிறுத்தி தாய்த்தெய்வ வழிபாட்டை புறந்தள்ளி புராண கடவுளை புகுத்தி, தமிழக(திராவிட) மக்களை சாதியாக பிரித்து மேலாண்மை செய்தது, செய்துகொண்டு இருக்கிறது என்பதே ஆகும். ஒரு சிந்தனை ஒரு கருத்தியலாக உருப்பெற்று மக்கள் திரளின் ஆதரவு கொண்டு அந்தந்த காலகட்ட சமூக பொருளாதார தேவைகளை முன்வைத்து எப்படி ஒர் இயக்கமாக நிறுவனமாக பரிணாமம் பெறுகின்றன என்று ஆராம்பிக்கிறார். நிறுவன மயமான சமண பௌத்த சமயங்களை எப்படி பக்தி இயக்க சைவ வைணவ சமயங்கள் வீழ்த்தின என்றும் சமண சமயம் ஏன் வலுவிழந்தது எதனால் வீழ்த்தப்பட்டது அதன் சமூக மற்றும் வாழ்வியல் சார்ந்த காரணங்கள் என்ன என்றும் ஹரப்பா நாகரிக பாசுபத வழிபாடு காபாலிகம், காளாமுகம் என்று எப்படி சைவ மதமாக உருப்பெற்றது எனவும் பெண்ணைத் துறத்தலே துறவு என்னும் பெண்ணுக்கு வீடுபேறு கிடைக்...