ஒரு தத்துவ விசாரணை!

Premise:

தென்றல் வந்து தீண்டும் போது பாடல் காதல் பாடல் அன்று என்கிற உறுதியாலும் நிறம் பற்றிய தத்துவப் பாடலோ என்ற எண்ணம் எழுந்ததாலும் இக்கட்டுரை.

Philosophy of Colour:

நிறம் என்பது அகநிலைப்பட்டது என்றும் இல்லை இல்லை அது புறவயப் பட்டது என்றும் இருவித கருதுகோள் உள்ளன.

நிறம் என்ற ஒன்றை எந்தப் பொருளும் தன்னகத்தே கொண்டில்லை.

அது நம் பார்வையின் மூலம் மற்ற காரணிகளான பொருளின் தன்மை மற்றும் ஒளி அலைகளின் அலைநீளம்(Wavelength), அலைவெண்(frequency) போன்றவை ஏற்படுத்தும் ஒரு வித விளைவு அல்லது தோற்றப்பிழை(illusion) என்றேக்கூட கூறலாம்.

Color is nothing but a Psychological property of our Visual experience. There are no colors in physical world.

Colour is a Perception which changes according to the wavelength of light. Hence it could not be labelled as a physical property of an object. It is Subjective to the eyes of beholder. Be it an animal or bird or human.

அதாவது நிறம்/வண்ணம் என்றத் தன்மை நம் மூளையில் உள்ளதே ஒழிய காணப்படும் பொருட்களில் இல்லை.

நம் கண்கள் ஒளி அலைகளின் நீளம்(Wavelength) சார்ந்தே நிறங்களை உணர்கிறது. அது ஒரு Subjective தன்மை. 

இதை அடிப்படையாகக் கொண்டு தென்றல் வந்து தீண்டும் போது பாடல் தரும் தத்துவப் பொருள் காண்போம்.

An Inquiry:

காதலிக்கு பார்வை இல்லை என்று வருத்தம் கொள்ளும் நாசரிடம் "என்னோட கண்ணா இருந்து இந்த உலகத்தை பாரு" என்று ரேவதி சொல்கிறார்.

என்னுடைய கண்ணாக இரு. உன் மூலமாக/வழியாக நான் பார்க்கிறேன் என்று சொல்லவில்லை. 

என்னுடைய கண்ணாய் இருந்து நீ இவ்வுலகைப் பார் என்கிறார்.

அதாவது காதலனுக்கு பார்வை/நிறம் பற்றிய உண்மையை பார்வையற்ற நாயகியான ரேவதி உணர்த்த விழைகிறார்.

Finding:

தென்றல் தீண்டும் போதும், வெயில் காயும் போதும் ஏற்படும் எண்ணங்களுக்கு என்ன வண்ணம் என்ற கேள்வியும்

அதன் மூலம் Colors are not what we see actually, it is a feeling inside, color is an experience எனும் விதமாய்  வண்ணங்களின் தன்மை உணர்ந்து "எண்ணமெல்லாம் வண்ணம்" என்றும் "எண்ணங்களுக்கு ஏற்ற படி வண்ணமெல்லாம் மாறுகிறது என்றும் நாசர் பாடுவார். 

Colour is Subjective:

பூ வாசம், குயில் இசை, நீர், உலகம், காலம் என்று எதையும் சாராத(independent) & நிலையற்ற (uncertain) இயற்கை பற்றி ரேவதி பாட, அதை ஆமோதித்து நாசரும் பாடுவார். 

இந்த நிலையற்ற Uncertain இயற்கையில் பார்வை தரும் வண்ணம் என்ற மாயை பற்றிய வருத்தம் எனக்கில்லை என்று பார்வையற்ற நாயகி சொல்வது போல் இருக்கிறது.

ரேவதியைப் பொறுத்தவரை பார்வை/வண்ணம் என்பது Subjective. அதனால் விளைவது என்னவோ தோற்றப்பிழை தான். 

அதைப்பற்றி தான் கவலை கொள்ளவில்லை என்பதை உணர்த்தும் விதமாய்க் கடைசி வரியில்,

பார்வைத் திறன் கொண்ட நாசரிடம்  "உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? என்ற கேள்வியை ரேவதி Satirical ஆக முன்வைப்பதோடு பாடல் முடிகிறது.

Conclusion:

இதை வைத்து ஒப்புநோக்கும் போது வண்ணம் பற்றிய தத்துவார்த்தப் பின்னணி கொண்டு அமைக்கப்பட்ட பாடல் போல் இது இருக்கிறது.

Comments

Popular posts from this blog

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

தொ.ப என்ன சொல்கிறார்?