அனைத்தையும் தமிழாக்கல்!...?

அனைத்தையும் தமிழாக்கல். நலமே. Computer கணினியாயும் Typewriter தட்டச்சுப் பொறி ஆனதும் நலமே. 

"வட சொல் கிளவி வட எழுத்து ஒரீஇ" 

"சிதைந்தன வரினும் 
இயைந்தன வரையார்" 

இது தொல்காப்பியம். 


இதில் ஒரீஇ என்று தொல்காப்பியர் பெயரை வினையாகக் கையாண்டமையும் கவனிக்க வேண்டிய ஒன்று. 

அப்படிப் பார்க்கின்,
 ஜனவரி சனவரி ஆனதும் ஜூன் சூன்/யூன் ஆனதும் ஜூலை சூலை/யூலை ஆனதும், ஜீசஸ் யேசு ஆனதும், ஜோசப் யோசப்பு ஆகி சூசை ஆகி வளன்(Ref.தேம்பாவணி) எனப்பெயர் பெற்றதும், 

லக்ஷ்மனன்-இலக்குவன் ஆனதும், விபீஷணன்-வீடனன் ஆனதும், கர்ணன்-கன்னன் ஆனதும் இன்னும் பிறவும் பலவும் நலமே. 

பிரச்சனையோ கோளாறோ இதில் இல்லை. ஆனால் எவ்வெவற்றை எல்லாம் தமிழாக்குதல் என்பதில் எதையெல்லாம் தமிழாக்கி தமிழாகவேக் கொண்டு தமிழைச் சிதைத்தோம் என்பதில் இருக்கிறது. 

தொல்காப்பிய விதிப்படி வட சொற்கள் தமிழ் ஆகும் போது நஷ்டம் நட்டம் ஆகலாம், விஷயம் விடயம் ஆகலாம், விஷம் விடம் ஆகலாம்.

ஆனால் தேவ பாஷையான சம்ஸ்கிருத பாஷை ஏன் தேவ பாடை ஆகக்கூடாது? இடக்கர் அடக்கல்லா? மங்கலம் கருதியா? என்ன எழவு மயிரோ?

ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்திய பொய்ப் புராணம், வர்ண ஜாதி பேதம் எல்லாம் உட்புகுதிய அந்தப் பார்ப்பன உயர்சாதி ஒட்டுண்ணிகளின் பாடையை பாடை என்று அழைப்பதில் என்ன நட்டம்? 

இங்கே மட்டும் தொல்காப்பியம் விதிவிலக்கோ? 

மேலும் வட பாடை சொல்லான ஜாதியை மட்டும் ஏன் அதே தொல்காப்பிய விதி கொண்டு "சாதி" என்று தமிழ்மயப்படுத்த வேண்டும்? 

அக்கால தமிழர்களிடத்தில் ஜாதி இல்லாத போழ்து ஜாதியை சாதி என மாற்றி சாதியே தமிழ்ச்சொல் தான் என்றவாறு ஏன் தமிழ்படுத்தப்பட வேண்டும். 

வட பாஷையான அதாவது வட பாடையான சம்ஸ்கிருத பாடைச் சொல்லான ஜாதியை ஜாதி என்றே குறிப்பிட வேண்டும். அனைத்தையும் தமிழாக்கல் என்பது தமிழுக்கு கேடு.

Comments

Popular posts from this blog

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

தொ.ப என்ன சொல்கிறார்?