தனியார்மயம் & SC/ST/OBC-களின் அரசியல் அதிகார வீழ்ச்சியால் நலிவுறும் இட ஒதுக்கீடு.

ஆய்வறிஞர் & பேராசிரியர் Christophe Jaffrelot மற்றும் kalaiyarasan அவர்கள் இணைந்து The Indian Express நாளிதழுக்கு எழுதிய கட்டுரையின் மொழியாக்கம். புரிதலுக்கு சில கூடுதல் தகவல்களை சேர்த்துள்ளேன். இந்தியாவில் நேர்மறை பாகுபாடு(Positive Discrimination) மூலம் சமூக ஒடுக்குமுறையை சரிசெய்ய இட ஒதுக்கீடு முறை இதுகாறும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது. படிப்படியாக, இந்த இட ஒதுக்கீடு முறை, சமூக அடிப்படையில் இல்லாவிடினும் கல்வி மற்றும் தொழில் அடிப்படையில் தலித் மக்களை ஒரு நடுத்தர வர்க்க அளவுகளில் பொருந்துமாறு உருவாகியுள்ளது. 1980 வரை அரசு நிர்வாகத்தின் மேல் பதவிகளில் இட ஒதுக்கீட்டால் ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தாலும், மக்கள் தொகையில் 16% உள்ள SC பிரிவினர் Group C மத்திய நிர்வாக அரசு பணியில் 14% இடங்களை பிடிக்க 1984 -ல் தான் முடிந்தது. அதுவே Group B பணிகளில் 14.3% வர 2003 வரையும், Group A பணிகளில் 13.3% வர 2015 வரையும் ஆனது. ஆனாலும் 16% மக்கள் தொகைக்கு ஏற்ப முழு பிரதிநிதித்துவம் இன்னும் அடையவில்லை. மத்திய பொது துறை நிறுவனங்களில்(CPSE) அவர்களின் விகிதம் 2014 முதல...