ஸ்மார்ட் சிட்டியும் கொரோனாவும் நகர்ப்புற சுகாதாரமும்

The Hindu ஆங்கில நாளிதழில் வழக்குரைஞர் மத்தேயு இடிகுல்லா எழுதிய  கட்டுரையின் ( புரிதலுக்கு இதர சில தகவல்களுடன்) மொழியாக்கம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொரோனா வைரஸ் பரவல் என்பது நகர/ பெருநகரங்களின் நெருக்கடியாக மாறியிருக்கிறது. தில்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்கள் அதிக தொற்று பரவல் மையங்களாக உள்ளன.

பொது சுகாதார நெருக்கடியால் மட்டுமல்லாது பொது முடக்கம், வேலையின்மை, வேலையிழப்பு காரணமாக பொருளாதார சரிவு, வாழ்வாதார பிரச்சினை என பல நெருக்கடிகளுக்கு இந்திய நகரங்கள் ஆளாகியிருக்கும் இவ்வேளையில், இந்திய நகரங்கள் நோய் பரவல் மற்றும் அதன் பிறகான சூழலை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்த பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசின் கொள்கைகள் நகர வளர்ச்சியின் மேல் இருந்து வருகிறது. JNNURM, AMRUT, தூய்மை இந்தியா திட்டம், AWAS யோஜனா என்று பல. அதில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மோடி அரசின்  முதன்மை திட்டமாக முன்னெடுத்து செல்லப்பட்ட (?) ஒன்று.

ஸ்மார்ட்  சிட்டி என்பது இந்தியாவின் 100 நகரங்களை தொழில்நுட்பங்களின் உதவி கொண்டு நகரமயமாதல் மற்றும் நகர இடம்பெயர்தல் காரணமாக நகரங்களில் ஏற்படும் சுகாதார மட்டும் உள்கட்டமைப்பு நெருக்கடியை தீர்த்து இந்திய நகரம்களை நவீனமயப்படுத்துதல் ஆகும்.

அதில் சாலை கட்டமைப்பு, வீட்டு வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து, கழிப்பிட வசதி, திடக்கழிவு மேலாண்மை, மழை நீர் வடிகால், தகவல் தொடர்பு, Recreation Facilities ஆகிய பூங்கா, விளையாட்டு திடல், சேரி(Slum) பகுதி மேம்பாடு, CCTV  என்பனவும் இன்ன பிறவும் உள்ளடக்கம். தமிழகத்தில் கூட 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் கழிந்த நிலையில் அதன் உத்வேகத்தில் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி புல்லட் ரயில் என்று பேசப்பட்ட பசப்பு வார்த்தைகள் கூட தற்போது இல்லை.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சகத்தின் தகவல் படி  100 நகரங்களை மேம்படுத்த ஒதுக்கிய 5151 திட்டங்களில் 4700 மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டு அதிலுமே கூட 1638 தான் முடிக்கப்பட்டு உள்ளது.

செலவீனங்கள் படி பார்க்கின் 2,05,018 கோடிகள் ஒதுக்கப்பட்டதில் 26,700 கோடிகள் மதிப்புள்ள திட்டங்கள் மட்டுமே தான் நிறைவு செய்யப்பட்டு உள்ளன.

ஆக, இந்திய நகரங்களை நவீனமயப் படுத்துதல் என்பது வெறுங்கனவாக போன போன்று என்பதே இதன் மூலம் திண்ணம்.

பெரும்பாலான ஸ்மார்ட் நகரங்கள் COVID-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. சில நகரங்கள் வைரஸ் தொற்றை நிகழ்நேர தரவு கொண்டு கண்காணிப்பு செய்தாலும் அளவில் பெரிய பொது சுகாதாரம் மட்டும் பொருளாதார சீர்கேடு போன்றவை சவால்களாக அதன்முன் நிற்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் அதன் உள்கட்டமைப்பு வசதிகள் கவனிக்கப் பாடாததாகவே இருந்ததும்/இருப்பதும் தான். கிட்டத்தட்ட 5000 திட்டங்களில் வெறும் 69 மட்டுமே பொது சுகாதாரத்திற்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது.செலவீனம் அடிப்படையில் வெறுமனே 2,112 கோடிகள் தான். இது மொத்த ஒதுக்கீட்டில் 1% மட்டுமே ஆகும்.

மேலும் 74வது அரசியலமைப்பு திருத்தப்படி 12வது அட்டவணையில் நகர பொது சுகாதாரம் என்பது உள்ளாட்சி அரசின் முனிசிபாலிட்டி கீழ் வருவது. ஆனால் பொது சுகாதாரம் என்பது அரசால் கவனிக்கப்படாமலும், ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் உள்ளாட்சி அரசுகளின் பொறுப்புணர்வை தட்டி கழிப்பதாகவுமே உள்ளது.

பொது சுகாதார நெருக்கடியை நிறுவன, நிர்வாக மற்றும் மனித திறனை பலப்படுத்தி எதிர்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அரசுகளுக்கு உரிய அதிகாரம் கொடுத்து, நிர்வாகம் முறையாக செயல்படுத்தி, நிதியை அவர்களே பெருகிகொள்ளவோ, அல்லது நிதி ஒதுக்கீட்டின் மூலமோ உள்ளாட்சி அரசுகளுக்கு மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்தல் வேண்டும்.

மத்திய மாநில அரசுகளின் சுகாதார திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து அமுல்படுத்தும் Accredited Social Health Activists (ASHA) எனப்படும் ஆஷா பொது சுகாதார பணியாளர்களின் காலியிடங்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்கு தொகுபூதியம் அதிகரிப்பு, பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் போன்றவற்றை அரசு செய்துத் தர வேண்டும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளாவின் வெற்றி என்பது அதன் உள்ளாட்சி அரசுகளுக்கு இருந்த சுதந்திரம் மற்றும் அதிகார பரவலாக்கமுமே ஆகும். இன்னும் சில இடங்களில் அதிகாரிகள் குடியடிருப்போர் சங்கங்களை இணைத்து கொண்டதன் மூலமாக கூட நோய் பரவலை கட்டுபடுத்தி இருக்கின்றனர்.

ஆக, கொரோனா பரவலை தடுக்கவும் பொது சுகாதாரம் ஒழுங்காக செயல்படவும், முறையாக உள்ளாட்சியில் தேர்தல் நடத்தப்பட்டும், உள்ளாட்சி அரசுகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமாகவும், பொது சுகதாரத்தில் அதிகமாக முதலீடு செய்வதாலும், ஸ்மார்ட் சிட்டி போன்ற ஜால்ஜாப்புகளை தற்போதைக்கு ஒதுக்கி மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் திட்டங்களான Nation Urban Health Mission, National Urban Livelihood Mission போன்ற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றோடு சேர்த்து, நகர்புற வாழ் மக்கள் பயன்பெறும் வகையில் தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஒன்றை அரசு கொண்டுவர வேண்டும். இது நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

2010 முதல் கேரள அரசு இது போன்ற ஒன்றை செயல்படுத்தி வருகிறது என்பதும், COVID-19 காரணம் கொண்டு ஒடிசா, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் அதுபோன்றதொரு முன்னெடுப்பு செய்து வருகிறது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

எனவே, இந்திய நகரங்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அதை மேம்படுத்த சரியான வளர்ச்சி நோக்கிய திட்டமும், மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த திட்டங்களில் முதலீடுமே தற்போது அரசு மேற்கொள்ள வேண்டிய முக்கியமான செயல்பாடாகும்.

Comments

Popular posts from this blog

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

தொ.ப என்ன சொல்கிறார்?