தனியார்மயம் & SC/ST/OBC-களின் அரசியல் அதிகார வீழ்ச்சியால் நலிவுறும் இட ஒதுக்கீடு.

ஆய்வறிஞர் & பேராசிரியர் Christophe Jaffrelot மற்றும் kalaiyarasan அவர்கள் இணைந்து The Indian Express நாளிதழுக்கு எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்.

புரிதலுக்கு சில கூடுதல் தகவல்களை சேர்த்துள்ளேன்.

இந்தியாவில் நேர்மறை பாகுபாடு(Positive Discrimination) மூலம் சமூக ஒடுக்குமுறையை சரிசெய்ய இட ஒதுக்கீடு முறை இதுகாறும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது.

படிப்படியாக, இந்த இட ஒதுக்கீடு முறை, சமூக அடிப்படையில் இல்லாவிடினும் கல்வி மற்றும் தொழில் அடிப்படையில் தலித் மக்களை ஒரு நடுத்தர வர்க்க அளவுகளில் பொருந்துமாறு உருவாகியுள்ளது.

1980 வரை அரசு நிர்வாகத்தின் மேல் பதவிகளில் இட ஒதுக்கீட்டால் ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தாலும், மக்கள் தொகையில் 16% உள்ள SC பிரிவினர்

Group C மத்திய நிர்வாக அரசு பணியில் 14% இடங்களை பிடிக்க 1984-ல் தான் முடிந்தது.

அதுவே Group B பணிகளில் 14.3% வர 2003 வரையும், Group A பணிகளில் 13.3% வர 2015 வரையும் ஆனது. ஆனாலும் 16% மக்கள் தொகைக்கு ஏற்ப முழு பிரதிநிதித்துவம் இன்னும் அடையவில்லை.

மத்திய பொது துறை நிறுவனங்களில்(CPSE) அவர்களின் விகிதம் 2014 முதல் 2018 வரை 14.6 சதவீதத்தில் இருந்து 18.1% ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 1981ல் 21.38% ஆக இருந்த SC பிரிவினரின் கல்வி அறிவு 2011ல் 66.1% ஆக உயர்ந்து உள்ளது.

இது போன்றதொரு நிலையை தான் இதர பிறப்படுத்தப்பட்டோர்(OBC) என அழைக்கப்படும் BC/MBC மக்கள் மண்டல் அணைய அறிக்கை படி கிடைத்த இட ஒதுக்கீடு உரிமையால் பெற்றுள்ளனர்.

மண்டல் குழு அறிக்கைப் படி மக்கள் தொகையில் 52% உள்ள BC/MBC பிரிவினர் 2013 வரை Group A பணிகளில் 8.37 சதவீதமும், Group B பணிகளில் 10.01 சதவீதமும், Group C பணிகளில் 17.98 சதவீதமும் தான் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அவர்கள் விகிதம் 2004-ல் 16.6% ஆக இருந்து 2014-ல் 28.5% ஆக உயர்ந்து உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கின் OBC-யும் முழு பிரதிநிதித்துவம் அடையவில்லை.

இட ஒதுக்கீட்டால் அடைந்த இச்சிறு வாய்ப்புகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கும்படி அரசின் தனியார்மய கொள்கைகள் இருந்து வருகிறது.

நிதி அமைச்சர் COVID-19 தடுப்பு நிவாரண நிதியுடன் கூடிய நிர்வாக கட்டமைப்பு சீர்திருத்தத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துதலும் ஒன்று.

மேலும், மேற்சொன்ன சதவீத அடிப்படையில் பார்க்கும் போது பிரதிநிதித்துவ விகிதம் அதிகரித்து வருவது போல் தோற்றம் அளித்தாலும் பணி வாய்ப்பு எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கின் அது சரிந்து வருகிறது என்பதே நிதர்சனம்.

தனியார்மயம் காரணமாக மத்திய அரசு பணிகளில் 2006-ம் ஆண்டு 5.5 லட்சமாக இருந்த காலியிடங்கள் 2014-ல் 7.5 லட்சமாக உயர்ந்து உள்ளது. மத்திய தேர்வானைய குழு நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கு எடுக்கும் எண்ணிக்கை 2014-க்கும் (1236 காலியிடம்) 2018-க்கும்(756 காலியிடம்) இடையே 40% குறைந்து உள்ளது.

மேலும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2003-2012 ஆண்டுகளில் 32.69 லட்சத்தில் இருந்து 26.30 லட்சமாக குறைந்து உள்ளது.

அதில் இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் தலித் மக்கள் எண்ணிக்கை 16% ஆக 5.40 லட்சத்தில் இருந்து 4.55 லட்சமாக குறைந்துள்ளது.

2011 முதல் 2014 வரையிலான மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் 18.1 லட்சத்தில் இருந்து 14.86 லட்சமாக குறைந்து உள்ளது.

மாறாக OBC-களின் எண்ணிக்கை இக்கால கட்டத்தில் மத்திய அரசு பணிகளில் 1.38 லட்சத்தில் இருந்து 4.55 லட்சமாக உயர்ந்து உள்ளது.

இட ஒதுக்கீடு மூலம் OBC-களில் பயன் அடைவோர் எண்ணிக்கை மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 2008-2012 ஆண்டுகளில் 14.89 லட்சத்தில் இருந்து 23.55 லட்சமாக உயர்ந்தாலும், அதற்கு அடுத்த ஆண்டில் 23.38 லட்சமாக குறைந்து உள்ளது.

மத்திய அரசின் இணை செயலாளர் பதவிகளுக்கு குடிமைப்பணி அதிகாரிகளை தேர்ந்தெடுக்காமல் Lateral Entry எனப்படும் நேரடி நியமனம் மூலம் தனியாரில் நிபுணத்துவம் பெற்று விளங்கும் ஆட்களை நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகாரத்தில் கொண்டு வருவதன் மூலமும் இட ஒதுக்கீடு நலிவடைய செய்யப்படுகிறது.


இட ஒதுக்கீட்டை நலிவுற செய்யும் வேலையில் அரசோடு நீதிமன்றமும் இணைந்துவிட்டது. அதாவது வேலியே பயிரை மெய்வது போன்றது மாதிரி தான் நீதிமன்ற செயல்பாடு உள்ளது.

UGC பல்கலைகழக பேராசிரிய இடங்களை நிரப்ப முழு பல்கலைகழக காலியிடங்களை கணக்கில் எடுக்காது துறை வாரியான கணக்கெடுப்பு செய்து 13 point roster முறையின் படி இட ஒதுக்கீடு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை உச்ச நீதி மன்றமும் ஏற்று கொண்டது.


இதனால் SC/ST/BC/MBC பிரிவினர் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். இதன் மூலம் 11 மத்திய பல்கலைகழக காலியிடங்களில் 2.5% மட்டுமே SC, ST-யில் ஒருவர் கூட இல்லை, BC/MBC-ல் 8% மட்டுமே நிரம்பியது.


துறை வாரியாக இட ஒதுக்கீடு அளிக்கும் போது அது அனைத்து பிரிவினருக்கும் போய் சேராது. ஒரு துறையில் 10 இடங்கள் இருந்தால் 13 point Roster முறையில் 4,8,12வது இடம் OBC-க்கு எனவும் 7-வது இடம் SC-க்கு எனவும் 14-வது இடம் ST-க்கு எனவும் இருந்தால், அந்த 10 இடங்களில் 12வது வரிசையில் உள்ள OBC-யும் 14-வது வரிசையில் உள்ள ST பிரிவினரும் பிரதிநிதித்துவம் பெற வாய்ப்பில்லை. ஆனால் பல்கலை கழக மொத்த இடங்கள் முறைப்படி 100க்கு மேல் வரும் பட்சத்தில் எல்லோர்க்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும். 200 Point roster முறையே இட ஒதுக்கீட்டினை நடைமுறைபடுத்த தற்போது உள்ள alternative ஆகும்.


அது மட்டுமின்றி, நீதிமன்றம் தற்போது உயர் பதவியில் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என கூறியுள்ளது. கடந்த மாதம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மண்டல் ஆணை படி 27% OBC இட ஒதுக்கீடு ஒழுங்காக அமல்படுத்தவில்லை என அரசை பார்த்து கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

NEET வந்த பிறகு மருத்துவ படிப்பு இடங்களில் OBC-க்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால் 3 வருடங்களில் 10000 இடங்களை OBC மாணவர்கள் இழந்துள்ளனர்.

மேலும், தலித் மக்கள் கல்விக்காக அரசால் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி குறைந்து வருவதால், Special Component Plan படி மக்கள் தொகைக்கு ஏற்ப அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை 16% உள்ள SC மக்களுக்கு  6.5-9% மட்டுமே போய் சேருகிறது. இதனால் 50 லட்ச தலித் மாணவர்கள் உதவி தொகை கிடைக்காமல் இன்னல்படுகின்றனர்.

இந்தியாவில் நேர்மறையான பாகுபாட்டின் இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்துவது தலித்துகள் மற்றும் OBC-களின் அரசியல் செல்வாக்கின் செயல்பாட்டால் விழைந்த ஒன்று.

பகுஜன் சமாஜ் கட்சி, SP மற்றும் RJD உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தபோது, ​​குறிப்பாக அவை ஆளும் கூட்டணிகளின் ஒரு பகுதியாக இருந்தபோது இட ஒதுக்கீடு சார்ந்த கொள்கைகள் நடைமுறையில் பலன் அளித்தது.

ஆனால், இந்த கட்சிகளின் தேர்தல் வீழ்ச்சியானது, உயர் சாதியினரின் மறுபிரவேசத்தில் மட்டுமல்லாமல், சாமானியர்களுக்கு ஆதரவாக கொள்கைகளை வகுக்கும் போது உயர் சாதியினர் கேள்விக்குள்ளாக்கும் நிலைக்கும் கொண்டு வந்துள்ளது.

Comments

Popular posts from this blog

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

தொ.ப என்ன சொல்கிறார்?