அரசும் ஏழையும் தேசிய ஊரக வேலையும்

சுமார் 8.5 லட்ச குடும்பங்கள் தங்கள் தேசிய ஊரக வேலையின் 100 நாள் அளவில் 80 நாட்கள் பணி செய்து முடித்து விட்டனர் என்பது செய்தி.


அவர்களுக்கும் மற்றைய 14 கோடி ஊரக வேலை திட்டத்தில் பயன்பெறும் "குடும்பங்களுக்கும்" இந்த கொரோனா மந்த நிலையில் பொருளாதார பாதுகாப்பு அளிக்கவும் பாஜக அரசின் திட்டமான விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பு ஆக்கவும் (சிரிக்காமல் படிக்கவும்) அவர்களை உள்ளூர் விவசாய நிலங்களில் பணியில் ஈடுபடுத்த மோடி அரசும்,

வேண்டாம் வேண்டாம் அதை முறையான செயல்பாட்டுடன்  200 நாட்களாக அதிகரியுங்கள்  என்றும் சமூக மற்றும் பொருளாதார அறிஞர்களும் அரசுக்கு சமூக நல எச்சரிக்கையோடு சேர்த்து கோரிக்கையும் விடுத்துக்கொண்டே உள்ளனர்.

அஃதுதென்னப்பா ஏரி வேலைக்கு இந்த இக்கட்டான கொரோனா நேரத்துல அவ்ளோ முக்கியத்துவம் என்ற சந்தேகம் வரின் மேற்கொண்டு படிக்கவும்.

ஏதோ ஆட்சிக்கு வந்தோம் தேச்சிட்டு போனோம் என்றல்லாது காங்கிரஸ் அரசின் பற்பல திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்து இன்று வரை சட்ட பாதுகாப்போடு இயங்கிக்கொண்டு இருக்கிறது.

அது RTI சட்டமாகட்டும், RTE சட்டமாகட்டும், இன்னும் பல வறுமை ஒழிக்க சுகாதாரம் மேம்பட ஏழைகள் வாழ சமூக கட்டமைப்புகள் உருவாக்கும் திட்டங்கள் கொண்டு வந்தது ஆகட்டும் விமர்சனம் பல இருப்பினும் காங்கிரஸ்க்கு ஒரு கும்பிடு போட வேண்டும்.

அந்த வரிசையில் ஒன்றே MGNREGA எனும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை "உறுத்தியளிப்பு" திட்டம்.

குடும்பத்தில் ஒருவர்க்கு 100 நாள் வேலை. அவர்கள் அதை அரசு கொடுத்து செய்வது போல் அல்லாமல் உரிமையாக மக்களே கேட்டு பெறும் வேலை.

அரசு கொடுத்தாக வேண்டும். கேட்டு 15 நாட்களுக்குள் வேலை அளிக்கவில்லை என்றால் Unemployment Allowance பணம் என்பதை அரசு கொடுத்தாக வேண்டும்.

இந்த திட்டம் கிராம விவசாயம் மற்றும் அது சார்ந்த மக்களின் சமூக பிணைப்புகளை தலைகீழாக மாற்றி இருக்கிறது.

கிராமப்புற பெண்களிடத்தில் பணப்புழக்கம், அவர்கள் வங்கி கணக்கில் பணமிருப்பு, அவர்கள் பிள்ளைகளின் கல்வி, நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் Bargaining Power, விவசாய தொழில் இன்மையால் நகரம் நோக்கிய நகர்வை மட்டுப்படுத்தியது முதல்

கந்து வட்டி பிரச்சினை குறைதல், குடுக்கிற காசுக்கு வேல செஞ்ச பய இவன் இப்ப கூலிய ஒசத்தி கேக்குறானே என்ற ஆதிக்க சாதி நிலமுடையோர்களின் எரிச்சல் (சாதிய) குமைச்சல்,  கிராமப்புற வறுமையை மூன்றில் ஒரு பங்கு குறைத்தது வரை மிகப்பெரிய பங்கு ஆற்றி இருக்கிறது இத்திட்டம்.

இதை செயல்படுத்த காங்கிரஸ் விழைந்த போது இந்த திட்டம் பொருளாதார ரீதியாக சீரழிவை உண்டாக்கும் என்று சொன்ன உலக வங்கி சில வருடம் கழித்து ஊரக மக்கள் வாழ்வில் இதன் தாக்கத்தை கண்டு ஊரக வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உதாரணம் MGNREGA தான் என ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியது. அப்படிப்பட்ட திட்டம் அது.

கொரோனாவால் பொருளாதார முடக்கம், அதனால் வேலையின்மை, பசி, பட்டினி, நகர மக்கள் கிராமம் திரும்புதல் என பண புழக்கம் குறைந்துள்ள வேலையில் இதை 200 நாட்களாக உயர்த்தினால் அதனால் வரும் ஊதியம் கொண்டு மக்கள் அதை செலவு செய்வர். ஏழை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு மீளும் என்பதே சாதாரண பொருளாதார சூத்திரம்.

மேலும் இந்த கொரோனா வேலையின்மையால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழுள்ள கிராமப்புற மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஆனால் அரசோ அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த நினைக்கிறது. MGNREGA சட்டப்படி விவசாயத்தை பெருக்கும் வேலைகளில் மட்டுமே அவர்களை ஈடுபடுத்த வேண்டுமே ஒழிய நேரடியாக விவசாயத்தில் கூடாது.

Durable Productive Assets எனப்படும் ஏரி, குளம், கால்வாய் போன்ற நீர் நிலைகளை புனரமைப்பு செய்தல், மண் வளம் மேம்படுத்தல், மரங்களை அதிகப்படுத்தல், குடிநீருக்கு சமூக கிணறுகள் அமைத்தல், சாலைகளை மேம்படுத்தல் போன்ற வேலைகள் மட்டுமே அவர்கள் செய்ய வேண்டும்.

விவசாய வேலை அல்லாத Lean Season~களில் நிலமற்ற ஏழை விவசாய கூலிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவே MGNREGA கொண்டு வரப்பட்டது. அதனால் தான் 100 நாள் என்ற கணக்கு. மீதமுள்ள நாட்கள் அவர்கள் விவசாய தொழில்/ வேறு தொழில் செய்து கொள்வார்கள்.

மேலும் விவசாய கூலியை விட MGNREGA ஊதியம் குறைவு தான். அல்லது MGNREGA ஊதியம் விட விவசாய கூலி சற்று அதிகம். காரணம் நகரம் நோக்கி மக்கள் நகர்வு ஆள் பற்றாக்குறை, MGNREGA~வால் வந்த Labour Demand & Supply விளைவுகள்.

ஆக, குறைந்த ஊதியப்படி உள்ள MGNREGA~வை விவசாயத்தில் ஈடுபடுத்தும் போது ஒட்டுமொத்த விவசாய வேலையின் Demand Side அதிகரிப்பதால் Supply Side~ல் இருந்து மேலும் ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது. இது அங்கு நிலம் வைத்துள்ள ஆதிக்க சாதி மக்ககளுக்கு சாதகமாகவே முடியும். இதனால் நிலமற்ற SC/ST/OBC மக்களே பாதிப்பு அடைவர்.

MGNREGA வந்த பின் பெரும்பாலான பெண்கள் விவசாய கூலியை விட்டு வெளியேறினர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், "இனிமேல் பாலியல் சீண்டால்களுக்கு நாங்கள் ஆளாக தேவை இல்லை. கூலி வேலைக்கு நிலக்கிழார்களை நம்பி இருக்க அவசியம் இல்லை என்பதே.

தலித் மக்கள் தாங்கள் MGNREGA~வால் சுயமரியாதையாக வேலை செய்வதாகவும், நிலம் கொண்ட ஆதிக்க சாதிகள் ஒதுக்கல்கள் இனி எங்களுக்கு தொடராது எனவும், கூலியை உயர்த்தி கேட்கும் நிலையும் தங்களுக்கு கிடைத்தது என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் ஊரக வேலையில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் அவர்களை மீண்டும் MGNREGA மூலம் நிலம் படைத்தோர் நிலங்களில் வேலை செய்ய ஈடுபடுத்துவதால் ஆதிக்க சாதியினர் இதை சாதகமாகக் கொண்டு தங்கள் சமூக அந்தஸ்தை பயன்படுத்தி அவர்களை குறைந்த ஊதியத்தில் தங்கள் நிலங்களில் பணிக்கு அமர்த்த வாய்ப்பு உள்ளது.

அப்படி அரசே அதற்கு வழிவகை செய்வது போல் திட்டம் வகுப்பது என்பது சமூக பொருளாதார மாற்றத்தை பின்னோக்கி இழுத்து செல்வது போல் ஆகும்.

MGNREGA~வை விவசாயத்தில் கலப்பதை விட்டுவிட்டு விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க விவசாயத்தை இயந்திரமயமாக்கள் மூலமும் நவீன விவசாய முறைகள், உற்பத்தி செலவை குறைத்தல், Logistics & Infrastructure அதிகப்படுத்தல் போன்றவற்றை செய்தாலே உபயோகமாய் இருக்கும்.

ஆக, அறிஞர் பலர் சொல்வது போல் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தி சமூக கட்டமைப்புகளை உருவாக்கி, சரியான முறையில் செயல்படுத்தி அதன் மூலம் விவசாயத்தை பெருக்குவதே சரியாகும்.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 100 நாட்களுக்காக ஒதுக்கீடு செய்யும் 0.47% மட்டுமே உள்ள MGNREGA ஒதுக்கீட்டை 200 நாட்களாக அதிகப்படுத்தி நிதி ஒதுக்கினால் கூட மொத்த உற்பத்தியில் ஒரு சதவிகிதத்தை கூட தாண்டாது.

நிதியமைச்சர் தற்போது ஒதுக்கிய 40000 கோடியையும் சேர்த்து சுமார் 1 லட்சம் கோடி MGNREGA~வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது 0.47% of GDP. அவ்வளவே.

2% வரை ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பது அறிஞர்கள் கோரிக்கை.

One per Household என்பது மாற்றி குடும்பத்தில் இருவருக்கோ அல்லது எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் என்றோ மாற்றம் செய்தல், Legal Minimum Wages படி கூலியை உயர்த்துவது, Social Capital~ல் கவனம் செலுத்தி அதை NREGA மூலம் அதிகரிப்பது, அரசு நிர்வாகம் சரியாக கண்காணிப்பது, Social Audit முறையாக நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் தந்து, ஊதிய நிலுவை இன்றி ஒழுங்காக செயல்படுத்தப்பட வேண்டும்.

மேலும் பொருளாதாரம் revive ஆக Demand Side~ல் தான் இங்கு பிரச்சினை. நாட்டின் பொருளாதாரம் உயர அரசு அதை கவனியாமல் Supply Side~ல் போய் லோன் தருகிறேன், வரி தள்ளுபடி செய்கிறேன், லோனுக்கு தள்ளுபடி தருகிறேன் என்று பானையை உருட்டிகொண்டு இருக்கிறது.

Demand Side~ஐ ஊக்குவிக்க மக்களிடம் பணத்தை கொண்டு சேர்க்கும்படி ஏதாவது செய்தால் தேவலை. MGNREGA மூலம் வேலை அளிப்பது, அவர்கள் சுகாதார, மருத்துவ தேவைகளை அரசு ஏற்று அவர்கள் மருத்துவ செலவை குறைத்து அவர்களின் மற்ற நுகர்வை அதிகப்படுத்துவது , Direct benefit transfer, வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு பணம் அளிப்பது, கிராமப்புற வேலைவாய்ப்பை போன்று நகர்ப்புற வாழ் மக்களுக்கும் தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் (NUEGA) கொண்டு வருவது  போன்றவை ஏழை மக்களுக்கும் நாட்டுப் பொருளாதாரத்திற்க்கும் நன்மை பயக்கும்.

Comments

Popular posts from this blog

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

தொ.ப என்ன சொல்கிறார்?