இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லையா?

தமிழக அரசால் மத்திய அரசுக்கு அகில இந்திய ஒதுக்கீடாக தரப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட(BC, MBC) மாணவர்களுக்கு உரிமையான 50%  இடங்களை ஒதுக்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வழக்கு தொடுத்தன.

அரசியலமைப்பு சட்டத்தின் Article 32-ன் படி அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டவைக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்றும் கூறியுள்ளது.

இதற்கு முன்னர் உத்தரகண்ட் மாநிலம் SC/ST பிரிவினருக்கு உயர் பதவியில் இட ஒதுக்கீடு அளிக்க மறுத்ததன் பொருட்டு தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம், அரசாங்கம் இட ஒதுக்கீட்டை மறுத்தது தவறு/குற்றம் என்றும்

M.Nagaraj Vs Union of India(2006) வழக்கின் தீர்ப்பை முதற்கொண்டு SC/ST பிரிவினருக்கு உயர் பதவிகளில் முறையான பிரதிநிதித்துவம் உள்ளதா என அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

Society must ensure "Equity"(Reservation)  before heading towards "Equality".


M.Nagaraj Vs Union of India வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?

கடந்த 2006ம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அவை வழங்கிய தீர்ப்பில்,

1) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளின் பின்தங்கிய நிலை ( இது ஜர்னைல் சிங் வழக்கின் தீர்ப்பில் செல்லுபடியாகாது என நீக்கப்பட்டது)

*2) அந்த இரு சமூகங்களையும் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகள் பொறுப்பில் உள்ள பிரதிநித்துவம் மற்றும்

*3) நிர்வாகத் திறமை (Efficiency of Administration இட ஒதுக்கீட்டுக்கு முன்னும் பின்னும்)

(2018 ஜர்னைல் சிங் தீர்ப்பிற்கு பிறகு 2 மற்றும் 3ஐ மட்டும்) அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.

உத்தரகண்ட் மாநில நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.

அதில் வழங்கப்பட்ட தீர்ப்பில், மாநில அரசு எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது கட்டாயமல்ல என்றும் அரசமைப்புச் சட்டத்தின் 16 (4) பிரிவு, இட ஒதுக்கீடு வழங்க "வழிவகை" (Enabling) செய்யும் பிரிவே தவிர, கட்டாயமாக்கும் (Not Mandatory) பிரிவு அல்ல என்றும் கூறியது.

மேலும் ஒரு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்பாக, அவர்கள் போதுமான அளவில் பிரதிநிதித்துவம் (M.Nagaraj வழக்கின் 2வது நிபந்தனை)  செய்யப்படவில்லையென்பதை நிரூபிப்பதற்கான தகவல்களை சேகரிக்க வேண்டுமென்றும் கூறியது.

இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை என்றும்

பதவி உயர்வுகளில் தனக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை எந்தத் தனிநபரும் அடிப்படை உரிமையாகக் கோர முடியாது என்றும்

ஒருவேளை போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டாலும் கூட இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என எந்த ஒரு கட்டளையையும் (Mandamus) நீதிமன்றங்கள் மாநில அரசுகளுக்குப் பிறப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் அரசமைப்புச் சட்டக் கூறுகள் அடிப்படை உரிமைகள் பகுதியின் கீழ்தான் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதை நடைமுறைப்படுத்துவது அரசுக்குக் கட்டாயம்.

ஆனால், சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்போ, Article 16 (4), 16 (4a) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது கட்டாயமில்லை, தேவை என்றால் நடைமுறைப்படுத்தலாம் என்று புதிய பொருள் விளக்கத்தை அளிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் Article 16 பற்றிய குறுகிய புரிதல் என்பது மிகுந்த கவலை அளிக்கிறது. Article 14-ஐயோ, Article 16-ஐயோ அதன் உட்கூறுகளையோ தனியாக பொருள் கொள்வது தவறு என்று அரசியல் அமைப்பு அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சமத்துவம் என்பது Article 14-ல் மட்டுமின்றி அரசியலமைப்பின் முகவுரை மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டுமானங்களில் ஒன்றாகும். இதில் எந்த அரசும் மாற்ற இயலாது என்பது விதி.

ஆக, நீதியை, சமத்துவத்தை அரசியலமைப்பு வலியுறுத்தும் போது, அதை செயல்படுத்தும் எதுவும் அரசின் கட்டாய கடமையாகக் கருதப்படும். அது அரசு நிர்வாகத்தில் பொது பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக்கூறும் Article 16-ற்கும் (There "Shall be" equality of Opportunity), 16(4) வேலைகளில் இட ஒதுக்கீட்டிற்கும், 16(4a) உயர் பதவியில் இட ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும்.

மேலும் அரசியலமைப்பு சமத்துவத்தை வழிவகை செய்யும் Article 14, 15, 16, 38(2), 46, 335 ஆகிய அனைத்து சரத்துகளிலும் "Shall" என்ற கட்டாயம் என்னும் பொருள் தரும் வார்த்தையை தான் பயன்படுத்துகிறதே ஒழிய "May" என்னும் சொல்லை அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக நடத்துதல் என்று மட்டும் பொருள் கொள்வது தவறான புரிதல் ஆகும். 

பாலினம், மொழி, மதம், சாதி என ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இவ்விந்திய சமூக மக்களில் சமமானவர்களை சமமாகவும் சமம் அற்றவர்களை சமம் இல்லாமலும் நடத்தி இரு பிரிவினரும் சமமாக ஆக வழிநடத்துவதே சமத்துவம் ஆகும்.

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு மாறாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்திருப்பது ஆபத்தானதாகும். சமூக நீதி கொள்கைக்கு எதிரானது.

இட ஒதுக்கீடு கட்டாயமில்லை என்றால் எதற்காக 14,15, 16, 16(4), 16(4a), போன்ற சரத்துகள் அரசியலமையின் அடிப்படை உரிமைகள் பிரிவில் சேர்க்கப்பட வேண்டும்?

அரசின் கொள்கைகளை நெறிப்படுத்தி அரசு சட்ட திட்டங்கள் வகுக்கும் போது  சமத்துவத்தை பேண வழிவகுக்க சொல்லும் சரத்து 38(2), 46 போன்றவற்றை அடிப்படையாக கொள்ளுமாறு எதற்க்காக எழுதப்பட வேண்டும்?

எனவே இட ஒதுக்கீடு என்பது அரசின் கருத்துப்படியோ விருப்பப்படியோ கொடுப்பது அல்ல. அது அரசியலமைப்பால் சமத்துவத்தை உறுதிப்படுத்த அரசிடம் கொடுக்கப்பட்ட காட்டாயமான ஒன்று.

உச்ச நீதிமன்றமே அரசு தன் பொறுப்புகளை தட்டி கழிக்க வழிவகை செய்து தருவது மிகவும் ஆபத்தானது.

இந்நிலை அப்படியே தொடர்ந்தால் அரசு பணிகளில் BC/MBC/SC/ST பங்கேற்பு என்பது மேலும் குறைந்து கொண்டே வரும் சூழல் உருவாகும். அப்போதும் கூட தகுதி என்ற பார்ப்பனிய சிந்தனை கொண்டு நம்மை பேசாமல் செய்து விடுவார்கள்.

Merit/ தகுதி உள்ளவர்களால் தான் நிர்வாகம் சரியாக இயங்கும் என்ற கூற்றை உச்ச நீதிமன்றம் முன்னர் ஒரு தீர்ப்பில் நிராகரித்த வரலாறும் உண்டு. இட ஒதுக்கீட்டால் நிர்வாக திறமை மேம்பட்டு நிர்வாகம் சிறப்பாக இயங்கும் என்பதை பல ஆய்வுகள் , தீர்ப்புகள் நிரூபித்து உள்ளன.

https://theprint.in/opinion/supreme-court-just-destroyed-the-merit-argument-upper-castes-use-to-oppose-reservations/236142/


மேலும் இட ஒதுக்கீடு ஒன்றும் வறுமை ஒழிப்புக்காக அல்ல என்ற புரிதல் நம் எல்லோருக்கும் வேண்டும். இட ஒதுக்கீடு என்பது இதுகாறும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட  BC/MBC/SC/ST மக்களை அரசின் நிர்வாகத்தில் பங்குபெற செய்யும், அதிகார பரவல் செய்யும், ஜனநாயகத்தை மேம்படுத்த செய்யும் ஒரு Level playing field ஆகும்.


இதனை மண்டல் தீர்ப்பு முதல் கொண்டு நாகராஜ் தீர்ப்பு அதன் பிறகான தீர்ப்புகள் என பலவும் வலியுறுத்தி வந்தே உள்ளன. 

வறுமையை ஒழிக்க அரசு திட்டங்கள் சலுகைகள் எத்தனையோ உள்ளன. ஆனால் சமத்துவம் பிறக்க, சாதி பேதம் உண்டாக்கிய சமமற்ற நிலைகள் சரியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குரலை ஒலிக்க, அவர்கள் ஜனநாயகத்தில் பங்குபெற்று உரிமை பெற இட ஒதுக்கீட்டால் மட்டுமே முடியும். அதை விட சிறந்த மாற்று தற்போதைக்கு இல்லை என்பதே உண்மை.

ஆனால் நீதிமன்றம் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்றும்  கட்டாயமில்லை என்றும் சொல்வது ஜனநாயகத்தை, சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியலமைப்பிற்கு எதிரானதாகும்.

இட ஒதுக்கீடு இருந்துமே கூட இன்னும் மேல் அதிகார படியில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்ட வகுப்பினர் சரியான பிரதிநிதித்துவம் அடையவில்லை அடையவிடவில்லை.

89 மத்திய அரசின் Secretary பதவிகளில் 4 பேர் மட்டுமே SC/ST வகுப்பை சேர்ந்தவர்கள். 

மத்திய அரசின் 93 Additional Secretary பதவிகளில் 11 பேர் மட்டுமே SC/ST வகுப்பினர். BC/MBC ஒருவர் கூட இல்லை. இன்னும் பல தரவுகள் கொண்டு பார்க்கின் அரசு இட ஒதுக்கீட்டை ஒழுங்காக செயல்படுத்தவில்லை என்பது மட்டும் திண்ணம்.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் BC/MBC வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பாடாததால் வருடா வருடம் ஆயிரக்கணக்கான மருத்துவ இடங்களை நாம் இழக்கிறோம்.

உயர் சாதியினர் பிடியில் இருந்து மீளாத இந்த இந்திய அரசு மற்றும் நிர்வாகத்தில் பாடுபட்டு போராடி கொண்டு வந்த இட ஒதுக்கீடு இந்த அவல நிலையில் இருக்கும் போது, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று போராடும் இவ்வேளையில் அரசின் மீது எந்த கட்டாயமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறுவது நீதியாக இருக்காது. 

ஆகவே உச்ச நீதிமன்றம் இதை மறு சீராய்வு செய்து Article 142-ன் மூலம் முழுமையான நீதியை செயல்படுத்த மேற்சொன்ன 2 நீதிபதிகள் கொண்ட தீர்ப்பை சொல்லாதது ஆக்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

தொ.ப என்ன சொல்கிறார்?