Posts

ஒரு தத்துவ விசாரணை!

Image
Premise: தென்றல் வந்து தீண்டும் போது பாடல் காதல் பாடல் அன்று என்கிற உறுதியாலும் நிறம் பற்றிய தத்துவப் பாடலோ என்ற எண்ணம் எழுந்ததாலும் இக்கட்டுரை. Philosophy of Colour: நிறம் என்பது அகநிலைப்பட்டது என்றும் இல்லை இல்லை அது புறவயப் பட்டது என்றும் இருவித கருதுகோள் உள்ளன. நிறம் என்ற ஒன்றை எந்தப் பொருளும் தன்னகத்தே கொண்டில்லை. அது நம் பார்வையின் மூலம் மற்ற காரணிகளான பொருளின் தன்மை மற்றும் ஒளி அலைகளின் அலைநீளம்(Wavelength), அலைவெண்(frequency) போன்றவை ஏற்படுத்தும் ஒரு வித விளைவு அல்லது தோற்றப்பிழை(illusion) என்றேக்கூட கூறலாம். Color is nothing but a Psychological property of our Visual experience. There are no colors in physical world. Colour is a Perception which changes according to the wavelength of light. Hence it could not be labelled as a physical property of an object. It is Subjective to the eyes of beholder. Be it an animal or bird or human. அதாவது நிறம்/வண்ணம் என்றத் தன்மை நம் மூளையில் உள்ளதே ஒழிய காணப்படும் பொருட்களில் இல்லை. நம் கண்கள் ஒளி அலைகளின் நீளம்(Wavelength) சார்ந...

ஆ என்பது பசுவை மட்டும் குறிக்கும் சொல்லா?

Image
பசு மட்டுமே செல்வம் போலவும் அதை மட்டுமே அக்காலத்தில் கவர்ந்து சென்றனர் போலவும் திராவிடரின் எருமையை கீழாகவும் இழிவாகவும் நினைத்து, பல பேர் ஆநிரை கவர்தலில் "ஆ" என்பது பசுவை மட்டும் தான் குறிக்கிறது என்று சொல்கின்றனர்.  ஆ பற்றி நம்முடைய தொல்காப்பியம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்: ஆ என்பது பெண்பால் விலங்கினப் பெயர் என்கிறார் ஒல்காப்புகழ் தொல்காப்பியம் தந்த தொல்காப்பியர். பெண்பால் என்றால் எந்த விலங்கின் பெண் பால்? " பெற்றமும் எருமையும் மரையும் ஆவே" தொல்: பொருள்: மரபியல்: 1560 அஃதாவது பெற்றம்(பசு), எருமை மற்றும் காட்டுப்பசுவின் பெண்பால் பெயர் ஆ என்பது ஆகும். ஆக, தொல்காப்பிய வழி ஆ என்பது எருமையையும் சேர்த்தே குறிக்கிறது என்பதுத் திண்ணம். மேலும் மற்றொரு வகையில் விளக்க வேண்டுமென்றால், " காரா " என்னும் சொல் எருமையைக் குறிக்கும். அதைக் கொண்டு "ஆ" என்பதில் எருமையும் அடங்கும் என்பதை இலக்கண துணை கொண்டு விளங்கப் பார்ப்போம்.  சொற்புணர்ச்சி விதி : காரா= கார் + ஆ கார் = கருமை என்று பொருள். கருமை + ஆ  கருமை என்பது நிறம் குறித்த சொல்லாதலா...

How Collegium Works?

Image
Collegium முறை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடைய 5 பேர் கொண்ட குழுவே Collegium. Artice 124 படி தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகளை நியமிக்க  Collegium குழு சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஒன்றிய சட்ட அமைச்சருக்கு பரிந்துரை செய்யும். அதை ஒன்றிய சட்ட அமைச்சர், "தலைமை" அமைச்சருக்கு பரிந்துரை செய்வார். தலைமை அமைச்சரான பிரதமர் அந்த பரிந்துரையை குடியரசு தலைவர்க்கு அனுப்பி நியமிக்க ஆலோசனை வழங்குவார். இதுவே Article 217 படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி.அல்லது இதர நீதிபதிகளின் நியமனம் என்றால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி+ மேலும் 2 நீதிபதி கொண்ட Collegium உள்ளது. இவர்கள் மாநில முதல்வர்க்கு பரிந்துரை செய்வர். முதல்வர் கவர்னருக்கு அந்த பரிந்துரையை அனுப்புவார். இதனை கவர்னர், ஒன்றிய சட்ட அமைச்சர்க்கு அனுப்புவார். இவர் பிரதமர்க்கு பரிந்துரை செய்வார். பிரதமர் குடியரசு தலைவர்க்கு ஆலோசனை வழங்குவர். குடியரசு தலைவர் நியமனம் செய்வார். Collegium மூலம் பரிந்துரைக்கப்பட்டவர்களை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய சட்ட அமைச்சர் அப்பரிந்துரைப் பட்டியலை திரும்...

Discrimination in Disguise!

Image
The New economic policy of 90's, Capitalism and globalization & liberalisation has helped people to come out of poverty and somehow diluted the caste system in India.  However unlike poverty, Caste is a peculiar thing. We can eradicate poverty by series of some socio-economic policies or through some economic refroms. But caste, as Ambedkar said, is not a wall of bricks or barbed wire. Caste is a Notion; it's a state of mind. That's why caste system didn't get much affected by new changes brought in by modernised era. This Parasitic Caste, in its own way altered itself to the new changes brought in by the globalization.  The same old caste wine in new globalized bottle! For example, many might have heard or seen, one of the forms of untouchability called the two-tumbler system(இரட்டைக் குவளை முறை) in tea shops.  After the globalisation in 90's, government curbed the restrictions on plastic production and its import.           ...

The Power & mere association with it!

Image

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

Image
This is from கலகக்காரன் இசைஞானி இளையராஜாவின் கேட்டேளே அங்கே அதப் பாத்தேளா இங்கே song. This too was banned by Upper caste- Brahmin dominated All India Radio from airing at that time.  In this song Our Ilayaraja fused folk instrument Parai(பறை) with the dance of Brahmin lady.  Brahmins, who saw and still see Parai as a music form of lower caste/class and usage of this Parai(பறை மேளம்) for a brahmin lady's dance triggered them, as they saw this fusion as an intrusion of low caste art form into their ill conceived "pure" space.  How lovely 😍 our Ilayaraja polluted the notion of fricking purity the upper castes ingrained in their mind.😂 இசைஞானிக்கே End Card போட பாத்தீங்களாடா டேய் 😂

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

Image
வாங்கடா வந்து வந்தனம் பண்ணுங்கடா! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது was not a song about the protagonist who tries to learn bicycle.  Contrary to the popular perception, the song was actually about a downtrodden Dalit-Bahujan person(like Ilayaraja) who wanted to overcome the obstacles placed before him by this elite upper class & caste casteist society.  It was written by Ilayaraja's brother Gangai amaran. And I'm not surprised to know the fact that it was banned by upper caste dominated All India Radio(AIR).  Does any brahmin or Upper caste tolerate a Dalit-bahujan who tries to destroy their monopoly and their establishment and march upward? You could notice this in the lyrics like, " பாளையம் பண்ணபுரம் சின்னதாயி பெத்த மகன் ஏறியே வரான் டோய் " is actually Ilayaraaja.  And in " ரோட்டுல எல்லாம் மேடு ரொம்ப இருக்கு " is nothing but upper caste domination & it's obstacle,  and in ஏத்தி விடுங்க ...

அனைத்தையும் தமிழாக்கல்!...?

Image
அனைத்தையும் தமிழாக்கல். நலமே. Computer கணினியாயும் Typewriter தட்டச்சுப் பொறி ஆனதும் நலமே.  " வட சொல் கிளவி வட எழுத்து ஒரீஇ"  " சிதைந்தன வரினும்  இயைந்தன வரையார்"  இது தொல்காப்பியம்.  இதில் ஒரீஇ என்று தொல்காப்பியர் பெயரை வினையாகக் கையாண்டமையும் கவனிக்க வேண்டிய ஒன்று.  அப்படிப் பார்க்கின்,  ஜனவரி சனவரி ஆனதும் ஜூன் சூன்/யூன் ஆனதும் ஜூலை சூலை/யூலை ஆனதும், ஜீசஸ் யேசு ஆனதும், ஜோசப் யோசப்பு ஆகி சூசை ஆகி வளன்(Ref.தேம்பாவணி) எனப்பெயர் பெற்றதும்,  லக்ஷ்மனன்-இலக்குவன் ஆனதும், விபீஷணன்-வீடனன் ஆனதும், கர்ணன்-கன்னன் ஆனதும் இன்னும் பிறவும் பலவும் நலமே.  பிரச்சனையோ கோளாறோ இதில் இல்லை. ஆனால் எவ்வெவற்றை எல்லாம் தமிழாக்குதல் என்பதில் எதையெல்லாம் தமிழாக்கி தமிழாகவேக் கொண்டு தமிழைச் சிதைத்தோம் என்பதில் இருக்கிறது.  தொல்காப்பிய விதிப்படி வட சொற்கள் தமிழ் ஆகும் போது நஷ்டம் நட்டம் ஆகலாம், விஷயம் விடயம் ஆகலாம், விஷம் விடம் ஆகலாம். ஆனால் தேவ பாஷையான சம்ஸ்கிருத பாஷை ஏன் தேவ பாடை ஆகக்கூடாது? இடக்கர் அடக்கல்லா? மங்கலம் கருதியா? என்ன எழவு மயிரோ? ஒரு சாரா...

தினமலர் என்னும் தினமலம்!

Image
தமிழர்கள் எங்களை எல்லாம் பார்த்தால் இந்த பார்ப்பர ஒட்டுண்ணிகளுக்கு எப்படித் தான் தெரிகிறதோ? தமிழ் சிறிதளவாவது தெரியுமா இந்த சம்ஸ்கிருத பார்ப்பார ஒட்டுண்ணிகளுக்கு? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.                           தொல்.157 தமிழில் பெரும்பாலும் காரணப் பெயர்கள் தான். சம்ஸ்க்ருத ஒட்டுண்ணிகள் கூறுவது போல் பொய்க்கதை பெயர்கள் அல்ல. மால் என்றால் மயங்கல் ..மயக்கம் தருவது. மாலை என்பது கதிரவன் ஒளி இருளோடு மயங்கும் வேளை! அதனால் தான் உருபு ஏற்றப்பின், மால்+ஐ=மாலை. மயக்கும் உணர்வை தருவதால் மாலை.  மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் மயங்குகின்றேன் தோழி...என்ற பாடலைக் கேட்டதில்லையோ? மயக்கும் மாலை பொழுதே நீ போ போ...இனிக்கும் இன்ப இரவே நீ வா வா.... என்ற பாடலையும் கேட்டதில்லையோ? முல்லை நில கடவுள் மாயோன். மயக்கும் கடவுள். மனதை மயக்கும் உணர்வைத் தருவதால் அவன் மாயோன்/ திரு"மால்".  கால் என்றால் ஊன்றல். காலை என்பது கதிரவன் ஒளி உலகில் ஊன்றப்படும் வேளை!  அதனால், கால் என்பது உருபு ...

தனியார்மயம் & SC/ST/OBC-களின் அரசியல் அதிகார வீழ்ச்சியால் நலிவுறும் இட ஒதுக்கீடு.

Image
ஆய்வறிஞர் & பேராசிரியர் Christophe Jaffrelot மற்றும் kalaiyarasan அவர்கள் இணைந்து The Indian Express நாளிதழுக்கு எழுதிய கட்டுரையின் மொழியாக்கம். புரிதலுக்கு சில கூடுதல் தகவல்களை சேர்த்துள்ளேன். இந்தியாவில் நேர்மறை பாகுபாடு(Positive Discrimination) மூலம் சமூக ஒடுக்குமுறையை சரிசெய்ய இட ஒதுக்கீடு முறை இதுகாறும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது. படிப்படியாக, இந்த இட ஒதுக்கீடு முறை, சமூக அடிப்படையில் இல்லாவிடினும் கல்வி மற்றும் தொழில் அடிப்படையில் தலித் மக்களை ஒரு நடுத்தர வர்க்க அளவுகளில் பொருந்துமாறு உருவாகியுள்ளது. 1980 வரை அரசு நிர்வாகத்தின் மேல் பதவிகளில் இட ஒதுக்கீட்டால் ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தாலும், மக்கள் தொகையில் 16% உள்ள SC பிரிவினர் Group C மத்திய நிர்வாக அரசு பணியில் 14% இடங்களை பிடிக்க 1984 -ல் தான் முடிந்தது. அதுவே Group B பணிகளில் 14.3% வர 2003 வரையும், Group A பணிகளில் 13.3% வர 2015 வரையும் ஆனது. ஆனாலும் 16% மக்கள் தொகைக்கு ஏற்ப முழு பிரதிநிதித்துவம் இன்னும் அடையவில்லை. மத்திய பொது துறை நிறுவனங்களில்(CPSE) அவர்களின் விகிதம் 2014 முதல...

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லையா?

Image
தமிழக அரசால் மத்திய அரசுக்கு அகில இந்திய ஒதுக்கீடாக தரப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட(BC, MBC) மாணவர்களுக்கு உரிமையான 50%  இடங்களை ஒதுக்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வழக்கு தொடுத்தன. அரசியலமைப்பு சட்டத்தின் Article 32-ன் படி அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டவைக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்றும் கூறியுள்ளது. இதற்கு முன்னர் உத்தரகண்ட் மாநிலம் SC/ST பிரிவினருக்கு உயர் பதவியில் இட ஒதுக்கீடு அளிக்க மறுத்ததன் பொருட்டு தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம், அரசாங்கம் இட ஒதுக்கீட்டை மறுத்தது தவறு/குற்றம் என்றும் M.Nagaraj Vs Union of India (2006 ) வழக்கின் தீர்ப்பை முதற்கொண்டு SC/ST பிரிவினருக்கு உயர் பதவிகளில் முறையான பிரதிநிதித்துவம் உள்ளதா என அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. Society must ensure "Equity"(Reservation)  before heading towards "Equality". M.Nagaraj Vs Union of India வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன? கடந்த 2006 ம் ஆண்ட...

ஸ்மார்ட் சிட்டியும் கொரோனாவும் நகர்ப்புற சுகாதாரமும்

Image
The Hindu ஆங்கில நாளிதழில் வழக்குரைஞர் மத்தேயு இடிகுல்லா எழுதிய  கட்டுரையின் ( புரிதலுக்கு இதர சில தகவல்களுடன்) மொழியாக்கம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கொரோனா வைரஸ் பரவல் என்பது நகர/ பெருநகரங்களின் நெருக்கடியாக மாறியிருக்கிறது. தில்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்கள் அதிக தொற்று பரவல் மையங்களாக உள்ளன. பொது சுகாதார நெருக்கடியால் மட்டுமல்லாது பொது முடக்கம், வேலையின்மை, வேலையிழப்பு காரணமாக பொருளாதார சரிவு, வாழ்வாதார பிரச்சினை என பல நெருக்கடிகளுக்கு இந்திய நகரங்கள் ஆளாகியிருக்கும் இவ்வேளையில், இந்திய நகரங்கள் நோய் பரவல் மற்றும் அதன் பிறகான சூழலை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்த பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசின் கொள்கைகள் நகர வளர்ச்சியின் மேல் இருந்து வருகிறது. JNNURM, AMRUT, தூய்மை இந்தியா திட்டம், AWAS யோஜனா என்று பல. அதில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மோடி அரசின்  முதன்மை திட்டமாக முன்னெடுத்து செல்லப்பட்ட (?) ஒன்று. ஸ்மார்ட்  சிட்டி என்பது இந்தியாவின் 100 நகரங்களை தொழில்நுட்பங்களின் உதவி கொண்டு நகரமயமாதல் மற்றும் நகர இடம்பெயர்...

அரசும் ஏழையும் தேசிய ஊரக வேலையும்

Image
சுமார் 8.5 லட்ச குடும்பங்கள் தங்கள் தேசிய ஊரக வேலையின் 100 நாள் அளவில் 80 நாட்கள் பணி செய்து முடித்து விட்டனர் என்பது செய்தி. அவர்களுக்கும் மற்றைய 14 கோடி ஊரக வேலை திட்டத்தில் பயன்பெறும் "குடும்பங்களுக்கும்" இந்த கொரோனா மந்த நிலையில் பொருளாதார பாதுகாப்பு அளிக்கவும் பாஜக அரசின் திட்டமான விவசாயிகளின் வருமானத்தை 2022 க்குள் இரட்டிப்பு ஆக்கவும் (சிரிக்காமல் படிக்கவும்) அவர்களை உள்ளூர் விவசாய நிலங்களில் பணியில் ஈடுபடுத்த மோடி அரசும், வேண்டாம் வேண்டாம் அதை முறையான செயல்பாட்டுடன்  200 நாட்களாக அதிகரியுங்கள்  என்றும் சமூக மற்றும் பொருளாதார அறிஞர்களும் அரசுக்கு சமூக நல எச்சரிக்கையோடு சேர்த்து கோரிக்கையும் விடுத்துக்கொண்டே உள்ளனர். அஃதுதென்னப்பா ஏரி வேலைக்கு இந்த இக்கட்டான கொரோனா நேரத்துல அவ்ளோ முக்கியத்துவம் என்ற சந்தேகம் வரின் மேற்கொண்டு படிக்கவும். ஏதோ ஆட்சிக்கு வந்தோம் தேச்சிட்டு போனோம் என்றல்லாது காங்கிரஸ் அரசின் பற்பல திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்து இன்று வரை சட்ட பாதுகாப்போடு இயங்கிக்கொண்டு இருக்கிறது. அது RTI சட்டமாகட்டும், RTE சட்டமாகட்டும், இன்னும் பல வறுமை ஒ...

தொ.ப என்ன சொல்கிறார்?

Image
பேராசிரியர் தொ.பரமசிவன் ஐயாவின் சமயங்களின் அரசியல் என்ற நூலை வாசித்து முடித்தேன். இந்நூலின் கரு என்பது இந்துமதம் என இன்று அறியப்படும் வைதீக பிராமணிய மதம் எப்படி வேத வேள்விகள் மூலமும் சாதிய அடக்குமுறை மூலமும் அரசதிகாரத்தை கைக்கொண்டு சைவ வைணவ, சமண, பௌத்த சமயங்களை உட்செறித்து தன்னை நிலைநிறுத்தி தாய்த்தெய்வ வழிபாட்டை புறந்தள்ளி புராண கடவுளை புகுத்தி,  தமிழக(திராவிட) மக்களை சாதியாக பிரித்து மேலாண்மை செய்தது, செய்துகொண்டு இருக்கிறது என்பதே ஆகும். ஒரு சிந்தனை ஒரு கருத்தியலாக உருப்பெற்று மக்கள் திரளின் ஆதரவு கொண்டு அந்தந்த காலகட்ட சமூக பொருளாதார தேவைகளை முன்வைத்து எப்படி ஒர் இயக்கமாக நிறுவனமாக பரிணாமம் பெறுகின்றன என்று ஆராம்பிக்கிறார். நிறுவன மயமான சமண பௌத்த சமயங்களை எப்படி பக்தி இயக்க சைவ வைணவ சமயங்கள் வீழ்த்தின என்றும் சமண சமயம் ஏன் வலுவிழந்தது எதனால் வீழ்த்தப்பட்டது அதன் சமூக மற்றும் வாழ்வியல் சார்ந்த காரணங்கள் என்ன என்றும் ஹரப்பா நாகரிக பாசுபத வழிபாடு காபாலிகம், காளாமுகம் என்று எப்படி சைவ மதமாக உருப்பெற்றது எனவும் பெண்ணைத் துறத்தலே துறவு என்னும் பெண்ணுக்கு வீடுபேறு கிடைக்...

Abrogation of Article 370: A Fraud on Constitution.

Image
Has Article 370 been Scrapped? ================================ இல்லை, அதாவது இன்னும் இல்லை.  பிரிவு 370 இன்னும் நீக்கம் செய்யப்படவில்லை. பிரிவு 370 உட்பிரிவு(1)(c) படி பிரிவு 370ஐ வெறுமனே ஜனாதிபதி ஆணையின் மூலம் நீக்கவும் முடியாது. Condition Precedent: காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் (Constituent Assembly of Kashmir) பரிந்துரையின் மூலம், நாடாளுமன்றத்தில் பிரிவு 368 கூறும் வரையறையின்  படி தான் நீக்க முடியும். (the provisions of article 1 and of this article shall apply in relation to that State) பிரிவு 370 உட்பிரிவு 1(d) படி அரசியலமைப்பின் மற்ற கூறுகள் காஷ்மீருக்கு ஏற்றவாறு ஜனாதிபதி உத்தரவு/ஆணையின் மூலம் மாற்றி செயல்படுத்தலாமே ஒழிய பிரிவு 370ஐ முற்றிலுமாக மாற்ற முடியாது. (such of the other provisions of this Constitution shall apply in relation to that State subject to such exceptions and modifications as the President may by order specify) எனவே பிரிவு 370ல் மாற்றம் செய்ய பிரிவு 367ல் தான் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. பிரிவு 370 உட்பிரிவு(1)ன் படி ...